திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் துணை ராணுவப்படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். உலகளவில் இதுவரை ரூ. 500 கோடியை வசூலித்த ‘PS 1 &2’ படங்களை லைகா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.