தமிழகத்தில் புயல் எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு, வெண்பாக்கம் ஆகிய நான்கு தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.