தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 3.04 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். அதன் பிறகு 3.15 கோடி பெண் வாக்காளர்களும், 5,027 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருக்கிறார்கள். இந்த வாக்காளர் பட்டியலை சென்னையில் வைத்து தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ வெளியிட்டார்.

கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் பகுதியில்‌ 6.66 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். சிறிய தொகுதி அனைத்து சென்னை துறைமுகம் தொகுதியில் 1.7 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். மேலும் வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.