எஸ்பிஐ வங்கியில் 5,486 கிளர்க் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு ஏற்கனவே முடிந்தது.  இதையடுத்து முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 15-ந் தேதி தேர்வு நடத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் நாளான ஜனவரி 15-ல் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால் ஜனவரி 15-க்கு பதில் வேறு நாளில் முதன்மை தேர்வை நடத்த தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.