தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது படிப்படியாகத்தான் செய்ய வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும் என்ற என்னமோ விருப்பமோ எங்களுக்கு இல்லை. முதல் முறை குடிக்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் குறைப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.