தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் இன்னும் இரு தினங்களில் வரவிருக்கின்றன. பொதுவாக, ஆயுத பூஜை அன்று தங்களின் தொழில் சார்ந்த பொருட்களையும், சரஸ்வதி பூஜையன்று மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும் சாமி படத்திற்கு முன்பு வைத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் ஆயுதபூஜைக்கு மதம் சார்ந்த படம், சிலையை பயன்படுத்தக்கூடாது என ஒரு சுற்றறிக்கை வெளியாகி சர்ச்சையானது.

அந்த சுற்றறிக்கையில் கல்லூரி முதல்வரின் கையொப்பமும் இருந்தது. இந்நிலையில், மருத்துவ கல்லூரி நிர்வாகம் சார்பில் எந்த சுற்றறிக்கையும் அனுப்ப வில்லை. தவறான செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது என கல்லூரி நிர்வாகம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளது.