செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, உங்களின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவக் காரணங்களுக்காக கூட ஜாமின் தர முடியாது என தீர்ப்பளித்துள்ளார்.