சென்னை அருகே நாவலூர் சாலையில் இன்று முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாடு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படுவதாகவும், தென்சென்னை மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கக் கட்டணம் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாகவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.