இவர்கள் கேட்கப் போகிறார்கள் ஆனால் எதுவும் கொடுக்கப்பட போவதில்லை என தனது முகநூல் பக்கத்தில் ராமதாஸ் பதிவு செய்த கருத்து விவாதங்களை கிளப்பியுள்ளது. அதாவது 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக அரசு உறுதியான நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை. இந்த நிலையில் முதல்வரை அன்புமணி சந்தித்தது ராமதாஸுக்கு பிடிக்கவில்லையாம். குடும்ப அரசியலை தான் இப்படி பதிவிட்டிருக்கலாம் என்று பாமக வட்டாரத்தில் கூறப்படுகிறது.