தமிழகத்தில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், குமரி,தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் 147 மாவட்டங்களில் நிலச்சரிப்பு அபாயம் உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர பிரயாக், தெஹ்ரி ஆகிய மாவட்டங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

இஸ்ரோவின் கேளியங்கும் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் எனப்படும் தேசிய தொலை உணர்வு மையம் சார்பாக நம் நாட்டின் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிறைந்த பகுதிகள் குறித்த ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் மிகுந்த மாவட்டங்களின் பட்டியலில்தமிழகத்தின் கோவை மாவட்டம் 36-வது இடத்திலும் திண்டுக்கல் மாவட்டம் 41வது இடத்திலும் உள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய https://www.nrsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.