மதுரையில் உயர்நீதிமன்றம் அமைந்தது கருணாநிதி போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு பேசியது பெரும் சர்ச்சையானது. அவரின் பேச்சுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எ.வ.வேலு தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஐகோர்ட் மதுரை கிளை கலைஞர் கொடுத்த கொடை என்பதற்கு பதில், உணர்ச்சிவசப்பட்டு தவறான வார்த்தைகளை வெளிப்படுத்திவிட்டேன் என விளக்கமளித்துள்ளார்.