செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால், 3ஆவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமனம் செய்து தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். சி.வி.கார்த்திகேயன் எடுக்கும் முடிவு தான் இறுதி தீர்ப்பாக இருக்கும். இந்த வழக்கு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.