நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டரில் இருந்து நேற்று வெற்றிகரமாக வெளியே வந்த ரோவர் இன்று நகரத் தொடங்கியது. நிலவின் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யும் ‘ரம்பா’ கருவியின் செயல்பாடும் தொடங்கியது. இப்படி, லேண்டரில் உள்ள 3 கருவிகளின் இயக்கமும் தொடங்கியுள்ளது.