தனது மகன் பற்றி தகவல் அளித்தால் ரூபாய் 1 கோடி சன்மானம் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமாச்சல் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார், கோபிநாத் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் வெற்றி துரை சாமி மாயமானார்.

சென்னை அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை சட்லஜ் நதியில் இரண்டாவது நாளாக தேடும்பணி தீரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது மகன் பற்றி தகவல் அளித்தால் ரூபாய் 1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

சட்லஜ் நதி அருகே வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல்துறை மூலம் தெரிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது மகன் பற்றி தெரிந்தால் தகவல் அளிக்குமாறு வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார்.