இந்தோனேஷியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ அருகில் இருந்த பல பகுதிகளுக்கு பரவியது. இதனால் அப்பகுதி முழுதும் புகைமண்டலமாக மாறியது. பல மணி நேரம் பற்றி எரிந்த தீயால் ஏற்பட்ட புகையில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். இந்த தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.