செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது 3வது நீதிபதி கார்த்திகேயன் நாளை விசாரணை மேற்கொள்ளவுள்ளார். செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். இதையடுத்து இவ்வழக்கில் 3வது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நாளை இவர் வழங்கும் தீர்ப்பே இறுதி தீர்ப்பு என்பதால், இவ்வழக்கில் இது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது