செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது. இதன் அடிப்படையிலேயே கைது செய்தோம் என்று ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்திற்குள் அது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான ஆவணங்களை செந்தில் பாலாஜி பெற மறுத்ததற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளது. இது செந்தில் பாலாஜிக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.