தமிழ்நாடு முழுவதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மீறினால்; துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதனால், மாலை 5.30 மணி வரை பள்ளிகள் இயங்கும் என தெரிகிறது.