இபிஎஸ் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் சற்றுமுன் இணைந்தார். இபிஎஸ்-ஐ விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் கடந்தாண்டு அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டார். தற்போது மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இஸ்லாமியர் வாக்குகளை குறிவைத்து, அவருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சீட் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.