தமிழகம் முழுவதும் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் அறை திறக்க தடை விதித்து, தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. மதுபானக் கடைகளை தவிர்த்து, டீக்கடை, உணவகங்கள் உள்ளிட்ட எந்த இடங்களிலும் புகைப்பிடிப்பதற்காக தனி இடம் வைக்கக்கூடாது. விதிகளை மீறி புகைப்பிடிக்கும் கூடத்தை நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது