அமமுக பொருளாளரும் திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர், மண்டல பொறுப்பாளருமான ஆர்.மனோகரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியிலிருந்து விலகி சற்று நேரத்திலேயே சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இபிஎஸ்சை சந்தித்து அதிமுகவின் ஐக்கியமாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் தினேஷ் குமார், அப்துல் ரகுமான் மற்றும் சாத்தனூர் வாசு உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர். சமீபத்தில் இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நிலையில் பலரும் அதிமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.