பாஜக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் நாளை மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் என அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக உடன் கூட்டணியா? இல்லையா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.