நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய போதிலும் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது முதல் சிஏஏ என்று சொல்லப்படும் அச்சட்டம் அமலுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு இத்திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது