பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க, நில எடுப்புக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், காஞ்சிபுரம், சிறுவள்ளூர் பகுதிகளில் 1,75,412 சதுர மீட்டர் நிலத்தை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் தங்களின் கோரிக்கை, ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.