தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது. இலங்கையில் உள்ள மட்டக்களப்பு- திரிகோணமலைக்கு இடையே அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்துள்ளது. மேலும் காற்றழுத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.