கலைஞர் நினைவிடம் 26ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

கலைஞர் நினைவிடத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டதாக சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 26 ஆம் தேதி கலைஞர் நினைவிட திறப்பு விழாவிற்கு பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்தார் கலைஞர் நினைவிடத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் பேரவையில் முதலமைச்சர் பேசினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் வரும் 26ம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்படும். புதுப்பிக்கப்பட்டுள்ள அண்ணா நினைவிடமும் வரும் 26 ஆம் தேதி மாலை திறக்கப்படும். நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவன் கலைஞர். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமைக் கட்சி உட்பட எல்லா கட்சி உறுப்பினர்களும் வரவேண்டும் என சபாநாயகர் மூலம் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.