தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது ஊர்க்காவல் துறை நீதிமன்றம்.  ஏற்கனவே தமிழக மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்திருந்தது.

படகு ஓட்டுனரான ஜான்சன் என்பவருக்கு 6 மாத சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. சிறைத்தண்டனை பெற்ற அவர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டார். கடலில் எல்லை தாண்டி கைது செய்யப்பட்ட 19 மீனவர்களில் 18 பேர் விடுவிக்கப்பட்டனர். விடுதலையான 18 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,ஒருவருக்கு மட்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீனவர்கள் 3 பேருக்கு ஏற்கனவே இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்த நிலையில் மேலும் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து இராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.