விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கோஷ்டி பூசலை சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகிறது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவராக துரை சந்திரசேகர், தெற்கு மாவட்ட தலைவராக ஆர்.எம்.தாஸ், ஆவடி மாநகராட்சி தலைவராக ஈசுவ யுவராஜ் உள்ளிட்ட பலரை நியமனம் செய்துள்ளது அகில இந்திய காங்கிரஸ். மேலும், விரைவில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்படவுள்ளார்.