செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு இன்று 3வது நாளாக வாதங்கள் வைக்கப்படவுள்ளன. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவர் தரப்பு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, அமலாக்கத்துறையின் புலன்விசாரணையை முடக்க யாருக்கும் உரிமையில்லை என ED பதிலடி கொடுத்தது. இருதரப்பும் மீண்டும் இன்று வாதங்களை வைக்கவுள்ளன. இதன் அடிப்படையில் 3வது நீதிபதி முக்கிய முடிவு எடுக்கவுள்ளார்.