இன்று தக்காளி, சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பீன்ஸ் போன்ற சாம்பார் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. மொத்தவிலையில் தக்காளி Kg 20 குறைந்தது 110க்கும், சில்லறை விற்பனை கடைகளில் 130க்கும், பீன்ஸ் Kg 30 அதிகரித்து 110க்கும் விற்கப்படுகிறது. சாம்பார் காய்கறிகள், தேங்காய் என அனைத்து பொருட்களும் கணிசமாக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் 200, இஞ்சி 220, பூண்டு 200க்கும் விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.