கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அரசு பேருந்து மோதி பள்ளி மாணவியும் அவரது தாத்தாவும் உயிரிழந்தனர். அரசு பள்ளியில் படிக்கும் ஹிமாவர்சினி (14), அபிநயா (17) இருவரையும் தாத்தா ராமசாமி அழைத்து வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஹிமாவர்சினி, ராமசாமி உயிரிழந்த நிலையில் அபிநயா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.