வேதாரண்யம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றிபெற்றது செல்லும் என்று உயர்நீதிமன்றம் சற்றுமுன் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 2021இல் நடத்த சட்டமன்ற தேர்தலில் ஓ.எஸ்.மணியன் ரூ.60 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும், பொய் வாக்குறுதி அளித்ததாகவும் திமுக வேட்பாளர் வேதரத்தினம் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வெற்றி செல்லும் என உறுதி செய்துள்ளது.