தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர்,சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த தகவலையும் SBI வைத்துக் கொள்ளக்கூடாது. எஸ்பிஐ தாக்கல் செய்த உடன் தேர்தல் ஆணையம், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.