எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கினை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.சி.பழனிசாமி போலி அதிமுக உறுப்பினர் அட்டைகளை விநியோகித்து பணம் சம்பாதிப்பதாக இபிஎஸ் பேசியிருந்தார். அதனை எதிர்த்து கே.சி.பழனிசாமி தொடர்ந்திருந்த அவதூறு வழக்கினை கீழமை நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அது தற்போது மீண்டும் விசாரிக்கப்பட இருப்பது இபிஎஸ்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது