நாகப்பட்டினத்தில் 100 சுடுகாட்டு கூரை அமைத்ததில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. 1995-1996 அதிமுக ஆட்சியின்போது நடந்ததாக கூறப்படும் இந்த முறைகேட்டை விசாரித்த CBI சிறப்பு நீதிமன்றம் செல்வகணபதிக்கு கடந்த ஆண்டு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில் தற்போது தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.