தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழு நேர மக்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஜூலை மாதம் முதல் இந்த மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேயர் 30,000 ரூபாய், மாநகராட்சி உறுப்பினர் பத்தாயிரம் ரூபாய், நகராட்சி தலைவர்கள் 15 ஆயிரம் ரூபாய், நகராட்சி உறுப்பினர்கள் 5000 ரூபாய், பேரூராட்சி தலைவர் 10,000 ரூபாய் மற்றும் பேரூராட்சி உறுப்பினருக்கு 2500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்