மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்காக 14.90 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு..

மாற்றுத்திறன் மாணாக்கருக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 1ஆம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 3,000 ரூபாயில் இருந்து 6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 4,000 ரூபாயில் இருந்து 8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 உதவித்தொகை 12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.