அரசு அலுவலகங்கள் பொதுவாக திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை செயல்படும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையாகும். இதனைத் தவிர முக்கிய பண்டிகை நாட்களிலும் விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமை அன்று அனைவரும் பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான ஓட்டுனர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் இந்த உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.