தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெற தகுதி உள்ளவர்கள் பட்டியலை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி தேதி வாரியாக தெருக்களை பிரித்து வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் படி விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரு நகரங்களில் டோக்கன் முறை பின்பற்றப்பட உள்ளது.