பாதாள சாக்கடையைச் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை யாரும் ஈடுபடுத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, பாதாள சாக்கடையைச் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது. அறிவுறுத்தலை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.