தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு 1000 உரிமைத்தொகையானது செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் மகளிருக்கு 1000 கொடுக்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் பணி ஜூலை 24 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 3,000 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர்கள் முகாம்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட இருக்கின்றனர். அதோடு டோக்கன் முறையா வீடுவீடாக கொடுக்கும் முறையா அல்லது ரேஷன் கடைகளிலா என்பதை ஆட்சியர்களே முடிவு செய்ய இருக்கின்றனர்.