காஞ்சிபுரம் அருகே உடல் எடையை குறைக்க நினைத்து 20 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை சேர்ந்த சூர்யா என்ற 20 வயது இளைஞர் குண்டாக இருந்ததால் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார்.அந்த நிறுவனம் தந்த மருந்துகளை வாங்கி தொடர்ந்து பத்து நாட்களாக சாப்பிட்ட நிலையில் உடல் எடை மிகவும் குறைந்துள்ளது.

இந்நிலையில் அவர் இன்று திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் அவர் எந்த காரணத்தினால் உயிரிழந்தார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.