தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை அவசர எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.