இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். நேற்று 5,676ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சமாக 7,830ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் இறந்துள்ளனர். கொரோனா 10 ஆயிரத்தை தாண்டினால் “Work from home”, கொரோனா பகுதிகளை தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய நெருக்கடியில் அரசு இருக்கிறது.