அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணியிடம் ED விசாரணை நடத்தி வரும் நிலையில், திமுகவினர் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. தற்போது ED துணை இயக்குநரும் வருகை தந்துள்ளார்.. இதனால், எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானலும் நடக்கலாம் என்பதால், தலைமை செயலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அன்று தலைமை செயலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது