உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் காரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளிலும், அவரது மகனும் எம்.பி.,யுமான கௌதம சிகாமணியில் வீட்டிலும் அதிகாரிகள் குழுவினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரத்தில் உள்ள பொன்முடிக்கு சொந்தமான பள்ளி, கல்லூரி, அறக்கட்டளையிலும் சோதனை நடக்கிறது. இதற்காக துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான நிலையில், இன்று நடக்கும் சோதனை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.