இலங்கை கடற்படை கைது செய்த 21 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 133 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் நேற்று (06ம் தேதி) 21 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், முதல்வர்  ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் நேற்று 21 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.