இனி எப்போதும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது  என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டுக்கு எவ்வித பயனும் இல்லை என்று கூறிய அவர், கச்சத்தீவு, காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளுக்கு மத்திய அரசு உதவவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு தரவில்லை. எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி ஐந்து ஆண்டாகியும் எந்த பணியும் தொடங்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.