தமிழகத்தில் காய்ச்சல் மாதிரியான பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் மருத்துவர்கள் ஆலோசிக்காமல் வீட்டிலேயே மக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அண்மை காலமாக ஜலதோஷம், காய்ச்சல் மாதிரியான நோய்களுக்கு மருத்துவர்கள் அணுகாமல் மருந்தகங்களில் மருந்து வாங்கி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இது நாளடைவில் பிரச்சனையாக மாறும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.