இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அதேசமயம் சுனாமி பாதிப்புக்கு சாத்தியம் இல்லை எனவும் அந்நாட்டின் புவி இயற்பியல் மையம் தெரிவித்துள்ளது.